திங்கள், 23 நவம்பர், 2009

ஒரு கோடை வாழிடத்தின் கதை

முன்பு பாட்டன் காலத்த்தில்
மலை உச்சியை அடைய
நடந்துதான் செல்ல வேண்டி இருக்கும்.

பின்பு தாத்தாவின் காலத்தில்
புகைவண்டி பயணம் சாத்தியமயிற்று.

அப்பாவின் காலத்தில் நிமிடத்திற்கொருமுறை
பேருந்து பயணம் அறிமுகமாயிற்று.

இப்பொழுது நானோ
ஹெலிஹாப்டரில் சென்று விடுவேன்.


என் மகனுக்கு பிரச்சினை இல்லை


சாலை அமைக்கவும், எஸ்டேட் வளர்க்கவும்
உல்லாச விடுதிகள் கட்டவும்
மரங்களையெல்லாம் வெட்டித்தள்ளியதால்
இப்பொழுது மலை உச்சியே
அவன் வீட்டு முற்றத்தில்...

கருத்துகள் இல்லை: