புதன், 16 டிசம்பர், 2009

ஆணாதிக்க வேர்

ச்சே.. என்னதான் சொல்லு
"பெங்களூரு மாதிரு இல்லடா நம்ம ஊரு"

அங்கல்லாம் பாரு
எல்லா பொண்ணுங்களும்
ஜீன்சு போட்டுகிட்டு திரியிராளுக..

இங்கயும்தான் இருக்குறாளுகளே

எவளாவது ஒருத்தி...

ம்ஹூம்..

"எல்லாம் பவாட தாவனியிம்,சுடிதாரும்தான்"..

அங்கலாயித்துக் கொண்டான்
"முந்தாநாள் கடைத்தெருவில்
தனக்கு ஜீன்சும்
தன் தங்கை ஆசையிடன் மிடி கேட்டாலும்
சுடிதார் மட்டும்
வாங்கி கொடுத்த
நண்பன் முருகேசு"

கருத்துகள் இல்லை: