வெள்ளி, 23 மே, 2008

இளைஞர்க‌ள் - 2007

மலிவுவிலை மதுக்கடைகளில்
தள்ளாடும் நாங்கள்
நாளைய இந்தியாவை
தாங்கபோகும்தூண்கள்.

பங்க் கடைகளில்
கணக்கு வைத்து
புகைந்து கொண்டிருக்கும் நாங்கள்
எதிர்கால இந்தியாவின்எழுச்சி தீபங்கள்.

வெள்ளித் திரையின் இருளில்
சிறை இருக்கும் நாங்க‌ள்
நாளை உத‌ய‌மாக‌ போகும்
இந்தியாவின் விடிவெள்ளிக‌ள்.

டிஸ்கொதே கிள‌ப்புக‌ளில்
அரைநிர்வாண‌ பெண்க‌ளுட‌ன்
ஆடிகொண்டிருக்கும் நாங்க‌ள்
நாளைய‌ இந்தியாவை ஆள‌ப்போகும் அர‌ச‌ர்க‌ள்.

அமெரிக்க‌ க‌ன‌வுக‌ளுட‌ன்
உற‌ங்கிக் கொண்டிருக்கும் நாங்க‌ள்
நிக‌ழ்கால‌ த‌லைவ‌ர்க‌ளின்
க‌ன‌வுக‌ளில் வ‌ரும்க‌தாநாய‌க‌ர்க‌ள்.

கவிதை சாகுபடி

உன் கண்களென்னும்
கலப்பை கொண்டு
என் இதயமென்னும்
ஈரநிலத்தை
கிழித்தெரிந் திருக்காவிட்டால்
என்னுள்
எப்படி விளைந்திருக்கும்?
கவிதை என்னும்
குறுவை சாகுபடி.

உழவன் மகன்

தாத்தா

யானை கொண்டு

போரடித்த இடத்தில்

அப்பா

காளை கொண்டு

போரடித்த இடத்தில்

மகன்

தன் நண்பர்களுடன்

பேசிக்கொண்டிருக்கிறான்

போரடிக்கிறதென...

உழவன் மகன்-2

பன்னிரெண்டாம் வகுப்பில்

இர‌ண்டாவ‌து முறையாக‌தவறியவுடன்

"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு"

என்றார் பெரியப்பா"

நிலத்தை விற்றுவெளிநாட்டுக்கு அனுப்பலாம்"

என்றார் மாமா"

பக்கத்து நகரில்பெட்டிக்கடை வைத்துக்கொள்"

என்றார் அப்பா

கடைசிவரையாருமே சொல்லவில்லை

விவசாயம் பார் என்று.

சுதேச பற்று

அந்நியன்

அவசியமில்லாமல் வரி கேட்டபோது

ஆர்த்தெழுந்த இந்தியர்கள்

இப்போது

அரசு அதிகாரிக‌ள்

லஞ்சம் கேட்கும்போது

அமைதியாகவே இருக்கிறார்கள்.

ஓ!கேட்பது இந்தியன்என்பதால் சுதேசபற்றா?