பன்னிரெண்டாம் வகுப்பில்
இரண்டாவது முறையாகதவறியவுடன்
"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு"
என்றார் பெரியப்பா"
நிலத்தை விற்றுவெளிநாட்டுக்கு அனுப்பலாம்"
என்றார் மாமா"
பக்கத்து நகரில்பெட்டிக்கடை வைத்துக்கொள்"
என்றார் அப்பா
கடைசிவரையாருமே சொல்லவில்லை
விவசாயம் பார் என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக