ரொம்பவும் பிடிக்குமெனக்கு . .
எதற்கெனத் தெரியவில்லை
எங்கள் கிராமத்தில்
முதன்முதல் பொறியியல் படித்தவள் என்பதாளா?
இல்லை,
என் அப்பாவும்,தாத்தாவும் கூட பயப்படும்
கோவில் குறிசொல்பவர் குறித்து
"பித்தலாட்டக்காரன்" என்று ஏளனம் செய்யும் பகுத்தறிவு கண்டா?
இல்லை,
பாடப்புத்தகத்தில் மட்டும் இருக்கும்
புதுமைப்பெண்ணுக்கு
வாழும் உதாரணமாய் இருப்பதாளா?
ஏனோ சிறுவயதிலிருந்து பிடிக்குமெனக்கு . .
ஆனால்
இப்பொழுதெல்லாம் அவளை சரிவரப் பிடிப்பதில்லை . .
ஒருமுறை
தன் மாநிற முகத்தை
சில வாரங்களில் சிவப்பழகாக்கும்
அழகு க்ரீம்களை கொண்டு
சிவப்பாக்க முயற்சித்த
பேதமையைக் கண்டு . .