வியாழன், 24 ஜனவரி, 2013

மரபு கவிதை-2

நோக்கியாவோ சாம்சங்கோ பிளாக்பெர்ரியோ சைனாசெட்டோ
ஏர்செல்லோ ஏர்டெல்லோ ஐடியாவோ டொக்கொமாவோ
எதுவாக இருந்தாலும் உபயோக மிருக்காது
டவரேதும் இல்லாத இடத்துக்கு போகையிலே

("தரவு கொச்சகக் கலிப்பா"வில் முயற்சித்த பாடல்)

மரபு கவிதை-1

உன்னை நினைத்தே உருகுதே மனமே
உன்னைப் பிரிந்தால் இறப்பது நிசமே
எல்லாம் தெரிந்தி ருந்தும் கூடநீ
பிரிந்துச் சென்ற தேனடி வருண்யா.


("ஆசிரியப்பா" வில் நான் முயற்சித்த முதல் பாட்டு)