புதன், 23 டிசம்பர், 2009

கறுப்பு

எங்க ஊர் கோயிலுக்குள்
கறுப்பு நிறத்துக்கு மட்டும் அனுமதி இல்லை
சட்டைத்துணி,கைக்கடிகாரம்
ஏன் கறுப்பு நிற‌ பெல்டைக்கூட‌
வெளியிலதான் வைத்துவிட்டுப் போகவேண்டும்

"ஆத்தாவுக்கு கறுப்பு நெறம் ஆகாதாம்,
மீறி உள்ளபோனா தண்டிச்சிடுவாளாம்"
கதை,கதையாய் சொல்லுவார்
கோவில் பூசாரி

ஆனால்
தண்டிக்கும் ஆத்தாவும்,கதை சொல்லும் பூசாரியிம்
ஒருமுறைக் கூட தடுத்ததில்லை

ஒவ்வொரு ஆண்டும்
தன் கருப்புபணத்தை செலவு செய்து
திருவிழா எடுக்கும்
மேலத்தெரு மிராசுதாரை

கருத்துகள் இல்லை: