புதன், 18 நவம்பர், 2009

சட்டம் தன் கடமையைச் செய்யிம்

அங்கிருக்கும்
அனைத்து மண்பாண்ட கடைகளையிம்
அடித்து நொறுக்கினர்
அரசு அதிகாரிகள்
சாலையை ஆக்கிரமித்து
கடை விரித்திருப்பதாய் சொல்லி..

அரசை எதிர்த்து
மண்பாண்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்ட‌
த்தனை போராட்டங்களும்
பயனற்று போன நிலையில்
இப்பொழுதெல்லாம்
எளிதாக கடக்க முடிகின்றன அந்த சாலையை
மணல் அள்ளும் லாரிகளால்...

கருத்துகள் இல்லை: