வெள்ளி, 13 ஜூன், 2008

ஜல்லிக்கட்டு

அந்திப்பொழுதில்கன்றீந்த‌
தன்
வெள்ளைப் பசுவிற்காய்
இரவெல்லாம் தூங்காமல்
கண்விழித்திருந்த‌
மேலத்தெரு
சாமிராசும்

தனக்கு தெரியாமல்
மயிலக் காளையை
விற்றதற்காக‌
மூன்றுநாள்
சாப்பிடாமல் அடம்பிடித்த‌
பக்கத்துவீட்டு சுந்தரமும்

மாட்டுக்கு
புல்லறுக்கையில்
தன் விரலை
அறுத்துக் கொண்ட‌
கெடாமீசை முருகேசனும்

இப்பொழுது
சிறைச்சாலையில்

ஜல்லிக்கட்டு நடத்தி
பசுவதை செய்த‌குற்றத்திற்காக..

1 கருத்து:

M.Rishan Shareef சொன்னது…

அருமை..கவிதை வாசிக்கும் போது காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.