செவ்வாய், 17 ஜூன், 2008

விலைவாசி

விறகு அடுப்பில் சமைத்த பொழுது

"கண் எரிகிறது"

என்று சொன்ன அம்மா

சமையல் எரிவாயு

பயன்படுத்த ஆரம்பித்த பிறகு

புலம்பிக் கொண்டிருக்கிறாள்

வயிறு எரிகிறதென.

1 கருத்து:

M.Rishan Shareef சொன்னது…

விலைவாசி பற்றிய அருமையான கவிதை..!
எழுத்துக்களாலேயே புரிய வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்..!
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)