புதன், 3 அக்டோபர், 2007

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்
என் முப்பாட்டன் முன்டாசு கவிஞன்
நம்பிக்கையுடன் பாடினான்..

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
நான் பாடுகிறேன் நம்பிக்கையோடு..

ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
வல்லரசாய் நாமின்று ஆகிவிட் டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!

கருத்துகள் இல்லை: